பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொன்னமராவதி கிளை நூலகத்தின் சார்பில் வாசிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சோம.மல்லீஸ்வரி தலைமை வகித்தார். கிளை நூலகர் பா.ராமகிருஷ்ணன் வரவேற்றார். 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வாசிப்போம் நேசிப்போம் என்னும் தலைப்பில் கட்டுரைப்போட்டியை வாசகர் வட்ட தலைவர் கே.பொன்னுச்சாமி தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ, மாணவிகள் நூலகத்தினை பயன்படுத்தி பொது அறிவினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர் ம.பழனியப்பன் நன்றி கூறினார்.