அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பசுமை அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் பசுமை அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு குறிப்பேடுகள், வாய்ப்பாடுகள், ஆங்கில அகராதிகள், நோட், புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஆசிரியர்கள், பசுமை அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள், ஜமாத்தார்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.