அறந்தாங்கியில் நாட்டின் 16-வது பிரதமராக நரேந்திர மோடி வியாழக்கிழமை பதவியேற்றதைக் கொண்டாடும் வகையிலும் 303 பேர் பாஜக எம்பிகளாக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையிலும் 303 வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.
கட்சியின் சார்பில் நகரத் தலைவர் ரெங்கையா தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் லெ. முரளீதரன் 303 பேருக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவி கவிதாஸ்ரீகாந்த், நகர பொதுச் செயலர் அ. சின்னையா, நகரச் செயலர் ஆர். ஜெயபாண்டியன், கட்சி நிர்வாகிகள் இராம. தாமரைச்செல்வன், வீ. வீராமாகாளியப்பன், ஆர்.எம். அண்ணாமலை, அரு. காடப்பன், கீதை கண்ணன், எஸ்.பி. அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.