சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேசித் தீர்க்காமல், போராடுவோரை காவல்துறையைக் கொண்டு அடக்க முயற்சிப்பதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற் ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ரெங்கசாமி, நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சந்திரன், மாவட்டச் செயலர் க. ராஜாராமன், துணைத் தலைவர்கள் ஏ. கருப்பையா, எம். சந்திரன், ஆண்டப்பன், இணைச் செயலர்கள் வி. ரெங்கசாமி, சோனமுத்து, ஐயப்பன், தங்கவேலு, பொருளாளர் பிரேம்குமார் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.