அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு. சுப்பிரமணியனை இடைநீக்கம் செய்துள்ள

அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு. சுப்பிரமணியனை இடைநீக்கம் செய்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து, புதன்கிழமை புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஆர். பழனிசாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆர். ரெங்கசாமி, கால்நடை பராமரிப்புத் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே. குமரேசன், கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விகேஆர். மனோகரன் உள்ளிட்ட பலரும் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில  நிர்வாகியின் மீதான நடவடிக்கையை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com