ஆலங்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் போக்குவரத்து போலீஸார் பொதுமக்களிடம் சாலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் போக்குவரத்து போலீஸார் பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி புதன்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான போலீஸார் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம், மது போதை, செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து,  தலைக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com