புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த க. குணசேகரன் பதவி உயர்வு பெற்று நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சிவக்குமார் இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.