கந்தர்வகோட்டையில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து கந்தர்வகோட்டையில் வியாழக்கிழமை இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து கந்தர்வகோட்டையில் வியாழக்கிழமை இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வி.இளையராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்,  அசோக்கை வெட்டி கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யவும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com