புதுக்கோட்டை: புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கடந்த சனி , ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.
செவன்த் சென்ஸ் அகாதெமியின் முதன்மைச் செயல் அலுவலர் ஆர்.ஆர். கணேசன், நியுரோ லிங்குஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ஜி.எம். பிரவீன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர் ஏவிஎம்எஸ் கார்த்திக் வரவேற்றார். முதல்வர் கே. கணேஷ்பாபு வாழ்த்திப் பேசினார்.
இயந்திரவியல் துறைத் தலைவர் என். சபரிராஜன், மின்னணுவியல்
துறைத் தலைவர் எல்.மாலதி, கணிப்பொறியியல் துறைத் தலைவர் பி. வினோத் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.