சிலட்டூரில் தேர் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூரில் தேர்திருவிழா வெகுவிமர்சையாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்

அறந்தாங்கி:  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூரில் தேர்திருவிழா வெகுவிமர்சையாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிலட்டூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி மாத திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான 9-ம் நாள் தேர்திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, நான்கு ராஜ வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்துவந்தனர். பின்னர் ஏராளமான பெண்கள், மஞ்சள் ஆடையுடன் வேப்பிலையை கையில் வைத்து கும்பிடு தாண்டம் என்னும் விரதத்தை கடைப்பிடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com