அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூரில் தேர்திருவிழா வெகுவிமர்சையாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிலட்டூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி மாத திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான 9-ம் நாள் தேர்திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, நான்கு ராஜ வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்துவந்தனர். பின்னர் ஏராளமான பெண்கள், மஞ்சள் ஆடையுடன் வேப்பிலையை கையில் வைத்து கும்பிடு தாண்டம் என்னும் விரதத்தை கடைப்பிடித்தனர்.