ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி மக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயமும் தொடர் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
மேலும், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்-தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மழை வேண்டி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சிறப்பு தொழுகை நடத்தினர்.