கந்தர்வகோட்டை அருகே அரியாணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கிடாவெட்டு பூஜை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, அரியாணிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில் திருவிழா, பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. ஆனி 1-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது.
ஆனி 9-ஆம் தேதியான திங்கள்கிழமை கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திகடனாக கிடாவெட்டி பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடையும்.