தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜீவன்ராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டு உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசியர்களை நியமனம் செய்வதில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அதிகார அத்துமீறலைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.