பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதலில் சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு பால், பழங்கள், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வழிபாட்டில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.