கந்தர்வகோட்டையில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
கந்தர்வகோட்டையில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஞ்சள், திரவியம், அரிசிமாவு, தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பால் உள்ளிட்ட அபிஷேகங்களும், சிறப்பு பரிகார பூஜைகளும், தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.