ஆலங்குடியில் லாரி ஓட்டுநரிடம் திருடியவர் கைது

ஆலங்குடியில் லாரி ஓட்டுநரிடம் பணத்தை திருடியதாக  தொழிலாளியை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

ஆலங்குடியில் லாரி ஓட்டுநரிடம் பணத்தை திருடியதாக  தொழிலாளியை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் எஸ். அருள் (24) லாரி ஓட்டுநரான இவர், தர்மபுரியில் இருந்து ஆலங்குடிக்கு செங்கல் ஏற்றி வந்தார். லாரியில் இருந்த செங்கலை ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியைச் சேர்ந்த சி. சின்னையா (48) உள்ளிட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கினர். 
அப்போது, லாரியில் இருந்த ஓட்டுநர் அருளின் சட்டயில் இருந்து ரூ. 300-ஐ சின்னையா திருவிட்டாராம்.
இதுகுறித்து, அருள் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸார் சின்னையாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com