மீமிசல் மீனவர் வலையில் சிக்கிய 2 கடல் பசுக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மீமிசல் கடற்பகுதியில்  புதன்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் 2 கடற்பசுக்கள் சிக்கின.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மீமிசல் கடற்பகுதியில்  புதன்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் 2 கடற்பசுக்கள் சிக்கின.
மணமேல்குடி தாலுகாவுக்குட்பட்ட மீமிசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  புதுக்குடி கிராமத்துக்கு வடக்கே உப்பளம்  அருகே 2 கடற்பசுக்கள் மீனவர்கள் வலையில் சிக்கியதாகத் தகவல் வந்தது.
இதையடுத்து திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ரகுபதி, வனத்துறை அலுவலர் முத்துராமன், பட்டுக்கோட்டை ஓம்கார் நிறுவன இயக்குநர் பாலாஜி ஆகியோர் அங்கு சென்றனர்.
மீனவர்களிடம் இருந்த ஒரு கடற்பசு இறந்துவிட்ட நிலையில், பாதுகாக்கப்பட்ட உயிரினம்  என்பதால் உயிருடன் இருந்த சுமார் 7 அடிநீள கடல்பசுவை  கடலில் பத்திரமாக விட்டனர். இறந்த கடல் பசு மேல் நடவடிக்கைக்காக வனத்துறை வசம்  ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com