பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையில் சிபிஐ விசாரணையை நடத்த வேண்டும்,

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்...
பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையில் சிபிஐ விசாரணையை நடத்த வேண்டும், குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர். கர்ணா தலைமை வகித்தார், மாவட்டச் செயலர் துரை. நாராயணன், ஒன்றியத் தலைவர் கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டக் குழு  உறுப்பினர் கார்த்திகா, மாதர் சங்க  ஒன்றியத் தலைவி ஜெயந்தி, அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் பா. வரதராஜன்,  தமுஎச மாவட்டத் துணை செயலர் கவிபாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் தென்றல் கருப்பையா உள்ளிட்டோர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com