கந்தர்வகோட்டையில் மனிதச் சங்கிலி

கந்தர்வகோட்டையில் வா க்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்


கந்தர்வகோட்டையில் வா க்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ஜி. கலைமணி, குளத்தூர் வட்டாட்சியர் வரதராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
துணை வட்டாட்சியர் செல்வகணபதி,  பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மனிதச் சங்கிலியில் 18 வயது முடிந்தவர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை உள்ளிட்டவை  குறித்து அறிவுறுத்தப்பட்டது. விஏஓக்கள்,  வருவாய் அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com