புதுக்கோட்டை மெüண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா, துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், இயக்குநர் ஜெய்சன், முதல்வர் பாலமுருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 75 மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்த டாக்டர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ரத்தம் பெற்றுச் சென்றனர்.