பொள்ளாட்சி சம்பவம்:  மாணவர் மன்றம் ஆர்ப்பாட்டம்

பொள்ளா ட்சி சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பொள்ளா ட்சி சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்டத் துணைத் செயலர் தனலெட்சுமி தலைமையில்  வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர்  கே. ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். போராட்டத்தில்  மாணவர் மன்ற  மாவட்டச் செயலர் செல்லமுத்து, இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவர் தர்ம பிரசாத், மாவட்டத் தலைவர் கைலாச பாண்டியன், மாவட்ட பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள்அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com