பேருந்தில் நகை திருடிய பெண்கள் பிடிபட்டனர்

மணப்பாறையிலிருந்து விராலிமலை சென்ற பெண் பேருந்துப் பயணியிடம் நகை திருடிய  2 பெண்கள் பிடிபட்டனர். 

மணப்பாறையிலிருந்து விராலிமலை சென்ற பெண் பேருந்துப் பயணியிடம் நகை திருடிய  2 பெண்கள் பிடிபட்டனர். 
திருச்சி மாவட்டம், மருங்காபுரியைச் சேர்ந்த லட்சுமணண் மனைவி இந்திராகாந்தி(36). இவர் கடந்த சனிக்கிழமை இரவு மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து விராலிமலை செல்லும் நகரப் பேருந்தில் ஏறி மணப்பாறை அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். 
அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.  சுதாரித்த இந்திராகாந்தி அவ்வழியே வந்த 2 சக்கரவாகனத்தை நிறுத்தி விவரத்தைக் கூறி விராலிமலை நோக்கிச் சென்ற பேருந்தை துரத்தி ராஜாளிப்பட்டி அருகே மடக்கினார்.  
பேருந்தில் அவர் அருகே அமர்ந்திருந்த பெண் பயணியிடம் அவர் சோதனையிட முற்பட்டதை சற்றும் எதிர்பார்க்காத 2 பெண்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்ப முயன்றனர். 
அவர்களை மடக்கிப் பிடித்த சக பயணிகள் இருவரையும் விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம், துடியலூரைச் சேர்ந்த ரவி மனைவி அமுதா (24), ரஞ்சித் மனைவி சித்ரா என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com