புதுக்கோட்டை கீழ 4ஆம் வீதியிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் பால், தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்தும், காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
பக்தர்கள் எடுத்து வந்த பூக்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார்.