கந்தர்வகோட்டையில் முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளால் வாகனங்கள் பழுதடைவதாக புகார் எழுந்துள்ளது.
கந்தர்வகோட்டை ஊராட்சியில் பேருந்து நிலையம் முன் திருச்சி சாலையில் இருந்த பழைய வேகத்தடை சில நாள்களுக்கு முன் அப்புறப்படுத்திவிட்டு , புதிய வேகத்தடை சுமார் 2 அடி உயரத்திலும் , 2 அடிக்கும் மேலான அகலத்திலும் கற்களால் அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையைத் தாண்டும் கனரக வாகனங்களின் சக்கரங்கள் முறிந்தும் , அடிப் பட்டைகள், ஸ்பிரிங்குகள் உடைந்து வாகனங்கள் நகர முடியாமல் அதே இடத்தில் நின்று விடுகின்றன, இவ்வாறு பழுதடையும் வாகனங்களை சரி செய்ய 2 நாள்கள் ஆகுமென்பதால் இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன உரிமையாளர்களுக்கு பண நஷ்டமும் ஏற்படுகின்றன.
இதேபோல வேகத்தடை கந்தர்வகோட்டை காந்திசிலை அருகே பட்டுக்கோட்டை சாலையிலும் உள்ளது. எனவே முறையான வேகதடையை அமைத்து கனரக வாகனங்களையும் , போக்குவரத்து பாதிப்பையும் சரிசெய்ய வேண்டுமாய் வாகன வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.