அறந்தாங்கி நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
அறந்தாங்கி காவல்துறை ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபு உள்ளிட்டோர் ரோந்து சென்றபோது
அறந்தாங்கியை சேர்ந்த ரா. மாணிக்கம் (32) என்பவரிடமிருந்து 30 லாட்டரி சீட்டுகள், ரூ. 900, க. குமரன் (34) என்பவரிடமிருந்து 30 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.1200, ஆவுடையார்கோவிலை சேர்ந்த கா. கதிர்வேல் (40) என்பவரிமிருந்து 30 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.1500 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தார்.