குடுமியான்மலையில் தெப்ப உத்ஸவம்

அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் 

அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் 
பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது
இந்திய தொல்பொருள் ஆய்வுச் சின்னமாகவும், இசை கல்வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் செதுக்கப்பட்டு குடவரை கோயிலாக தனித்தன்மையோடு விளங்கும் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 12 தொடங்கி நடந்துவருகிறது. 
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போத்ஸவத்தில் நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத்தேரில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகம், மஹா தீபாராதனை, தொடர்ந்து தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com