கந்தர்வகோட்டை அருகில் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களிடம் வாக்களிப்பு மாதிரி செயல்விளக்கம் வியாழக்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை அருகிலுள்ள வேம்பன்பட்டி முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவுக்கு வதந்த பொதுமக்களுக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் உத்தரவின்பேரில் மாதிரி வாக்களிப்பு இயந்திரம் மூலமாக எவ்வாறு வாக்களிப்பது , இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்களித்த சின்னத்தை அறிந்து கொள்வது குறித்த இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர்.
நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை வட்டார வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.