அன்னவாசல் அருகேயுள்ள அகரப்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் செல்வராஜ் (33). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் ஊருக்கு வந்திருந்தார். வியாழக்கிழமை இரவு இவர் பைக்கில் அன்னவாசல் நோக்கி செல்கையில் மேட்டுச்சாலை அருகே சென்றபோது அன்னவாசலிலிருந்து இலுப்பூர் சென்ற லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
தகவலறிந்த வந்த இலுப்பூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மண்ணவேலாம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பழனிக்கண்ணுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.