ரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் குருதிக்கொடை விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் சிவ.சொர்ணம் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ம. செல்வராசு முன்னிலை வகித்தார்.பேராசிரியர் வேஅ. பழனியப்பன் அறிமுக உரையாற்றினார். மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று குருதிக்கொடை அளிப்பதின் பயன்களை விளக்கி கல்லூரி மாணவ, மாணவிகளை குருதிக்கொடை அளிக்க அறிவுறுத்தினார். பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி, கதி.முருகேசன், சி.முடியரசன், ப.விஜயலெட்சுமி, குறிஞ்சி கருத்துரை வழங்கினர். செங்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பொன். கதிரேசன் வரவேற்றார்.  பேராசிரியர் பெரி.அழகம்மை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com