மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 03:12 AM | Last Updated : 24th March 2019 03:12 AM | அ+அ அ- |

அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விராலிமலை பகுதி ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் அனுமதியின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளி கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து,
விராலிமலை காவல் ஆய்வாளர் மதன் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு விராலிமலை அருகேயுள்ள தேரவூர் மேட்டுப்பட்டி இணைப்புச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்
இந்நிலையில் அவ்வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர் ஆனந்த் (25) மீது வழக்கு பதிந்து லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேல் நடவடிக்கைக்காக வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.