வாக்களிப்பதன் அவசியம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது
இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். சிவதாஸ் பேரணிக்குத் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். விராலிமலை வட்டாட்சியர் சதீஷ்சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
விராலிமலை காமராஜர் நகரில் தொடங்கிய பேரணி , புதிய பேருந்து நிலையம்,கடைவீதி வழியாக சென்று சோதனைச்சாவடியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற வருவாய்த்துறையினர், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் சென்றனர்.