சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இப்பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள், ஒரு மாணவி 500-க்கு முறையே 467, 463,455 மதிப்பெண்களைப் பெற்று மாவட்டமற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர். இவர்களை பள்ளியின் இயக்குநர் முனைவர் ஜோனத்தன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன் மற்றும் முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்களும் வாழ்த்தினர்.