புதுக்கோட்டை முன்னாள் எம்பி  ராஜாபரமசிவம் காலமானார்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ராஜாபரமசிவம் (58) உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ராஜாபரமசிவம் (58) உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த இவர் சட்டப் படிப்பு முடித்துள்ளார்.  அதிமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலராகவும், 1998 இல் புதுக்கோட்டை மக்களவை தொகுதி அதிமுக  உறுப்பினராகவும் இருந்தார்.
பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த  அவர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தீபாவின் ஆதரவாளராக இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இவருக்கு மனைவி சுசீலா, மகன் தனேந்திரராஜ், மகள் காருண்யா ஆகியோர் உள்ளனர்.  இறுதிச்சடங்கு நெடுவாசல் மேற்கு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com