கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் உள்ள வரத்துவாரி மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரிட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
கந்தர்வகோட்டையில் உள்ள பெரியவயக்காடு ஏரி , பிசானத்தூர் பெரிய குளம் , மின்னாத்தூர் ஏரி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள குளங்களையும் இவற்றுக்கு மழைநீர் வரும் வரத்துவாரிகளில் மண்டியுள்ள கருவேல மரங்கள், புதர்களை மழைக் காலம் ஆரம்பிக்கும் முன்பே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும். குளங்கள், ஏரிகளின் கரைகளையும் , குழுமிகளையும் பலப்படுத்தி மழைநீர் வெளியேறாமல் தடுக்கவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.