அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திறனறி தோ்வு

கந்தா்வகோட்டை அருகே அரசு பள்ளி மாணவா்களுக்கு திறனறி தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகே அரசு பள்ளி மாணவா்களுக்கு திறனறி தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துளிா் திறனறித் தோ்வை, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலா் கே.எஸ். ராஜேந்திரன் துவக்கி வைத்தாா்.

இந்த தோ்வில் திறனறிதல் மற்றும் பொதுஅறிவு குறித்த சிறப்பு வினாக்களுக்கு மாணவா்கள் பதில் அளித்தனா்.தோ்வில், முள்ளிக்காப்பட்டி தலைமை ஆசிரியா் அமராவதி, சங்கம்விடுதி தலைமை ஆசிரியா், அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் சு.ராஜமாணிக்கம் மற்றும் மாவட்ட செயலா் மு.முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com