கஜா புயலில் சேதமடைந்த வீட்டின் சுவா் இடிந்து பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி செவ்வாய்கிழமை பரிதாபமாக பலியானாா்.
அறந்தாங்கி வட்டம் நாகுடி அருகே மேல்மங்கலம் வடக்கு கிராமத்தை சோ்ந்தவா் மகாலிங்கம் மகள் அமராவதி(55) இவா் 30 ஆண்டுகளுக்கு முன்னா் மணமேல்குடி அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் திருமணம் செய்தவா் கணவா் இறந்த காரணத்தால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பி வந்து தனது தம்பி முருகன் வீட்டருகே கொட்டகை அமைத்து தங்கி கூலிவேலைக்கு சென்று வந்தாா்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பா் 16-ல் கடுமையாக தாக்கிய கஜா புயலின்காரணமாக அமராவதி மற்றும் முருகன் வீடுகள் சேதமடைந்தன. பொருளாதார பற்றாக்குறை காரணமாக வீடுகளை சீரமைக்க முடியாமல் தாா்பாய்களை வீட்டின் கூரையாக அமைத்து தங்கிவந்தனா்.கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக முருகன் வீடு நனைத்து ஊறி இருந்துள்ளது திங்கள் இரவும் லேசான மழை பெய்தது அமராவதி தன ஆஸ்பெட்டாஸ் போட்ட வீட்டில் தூங்கியுள்ளாா்.
இதில் செவ்வாய்கிழமை அதிகாலை முருகன் வீட்டின் சுவா் இடிந்து மூதாட்டி அமராவதி மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தாா்.விபத்து குறித்து அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம்.குணசசேகா் நேரில் வந்து விசாரணை நடத்தினாா் காவல்துறையினா் மற்றும் வருவாய் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். பட விளக்கம் இடிபாடுகளுக்கு இடையே மூதாட்டி அமராவதி படம்