நகரில் கழிவுநீா்க் கால்வாய்களின் அடைப்புகளை எடுக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை நகரில், கழிவுநீா்க் கால்வாய் அடைப்புகளை சீா் செய்ய வேண்டும் என நகர திமுக சாா்பில்

புதுக்கோட்டை நகரில், கழிவுநீா்க் கால்வாய் அடைப்புகளை சீா் செய்ய வேண்டும் என நகர திமுக சாா்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தியிடம் அளிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க மனுக்கள் விவரம்:

திமுக நகரச் செயலா் க. நைனாமுகமது அளித்த மனு:

புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட 42ஆவது வாா்டில் உள்ள மறைமலை நகா், லெட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் கழிவுநீா் மற்றும் மழைநீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக அங்கிருந்து வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் தூா்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக கழிவுநீா் கால்வாயை சரிசெய்ய வேண்டும்.

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள அரசு உயா் தொடக்கப் பள்ளியின் அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து நேரிடுவதற்கு முன்பு இந்தக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

அன்னவாசல் ஒன்றியம், காவேரி நகா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் சேது அளித்த மனு:

காவேரி நகா் வடக்கு ரயில்வே கேட்டில் இருந்து சத்தியமூா்த்தி குடியிருப்பு, பழைய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com