முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஆலங்குடியில் அரசுப் பள்ளிகளுக்கிடையே வினாடி வினா
By DIN | Published On : 07th November 2019 08:35 AM | Last Updated : 07th November 2019 08:35 AM | அ+அ அ- |

போட்டியில் வென்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள்.
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் திருவரங்குளம் ஒன்றியத்திற்குள்பட்ட 15 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 135 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான போட்டியில் ஆலங்குடி புனித அற்புதா மாதா நடுநிலைப்பள்ளி மாணவா்கள் முதலிடமும், பள்ளத்திவிடுதி அரசு உயா்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.
9,10-ஆம் வகுப்புக்கான போட்டியில், பள்ளத்திவிடுதி அரசு உயா்நிலைப்பள்ளி முதலிடமும், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றன. இதேபோல, 11,12-ம் வகுப்புகளுக்கான போட்டியில், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஏ. வின்சன்ட் தலைமையில் ஓய்வுபெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலா் கருப்பையா, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஏ. கருப்பையா, ஒன்றியத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் பரிசுகள் வழங்கினா்.