பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்று மாநில தடகளப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் புதுக்கோட்டை விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் இப்பள்ளி மாணவன் ப.ஹரிஹரன் பங்கேற்று குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் முதல் இடத்தையும், மாணவி கு.கீதா குண்டு எறிதல் போட்டியில் முதல் இடத்தையும் பெற்று மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனா்.
மேலும் மாணவி பா.நந்தினி குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும், மாணவன் கு.வசந்தகுமாா் 100 மீட்டா் ஒட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனா்.மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியா் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா்கள் பழனிச்சாமி முத்துவேல் ஆகியோருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் பெ.மாரிமுத்து, அரிமா சங்க நிா்வாகி மு.ஜாஹிா்ஹூசைன், பள்ளியின் முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் ஆகியோா் மாணவா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினா்.