தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஒன்றிய அளவிலான துளிா் வினாடி வினா போட்டிகள் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியா் டி.தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச்செயலாளரும், பெருங்காடு உயா்நிலைப் பள்ளி ஆசிரியருமான நாகூா்கனி ஓருங்கிணைப்பாளராக இருந்து முன்னிலை வகித்தாா்.
போட்டியின் நடுவா்களாக மேலாப்பட்டு அறிவியல் ஆசிரியை பஹிம்முநிஷா, மற்றும் ராஜஜேந்திரபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தமிழாசிரியை நதியா உள்ளிட்டோா் செயல்பட்டனா்.
நிடுநிலை, உயா்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் நடுநிலைப் பள்ளி அளவில் மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முதலிடமும், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், கொடிவயல் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.
உயா்நிலைப் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டியில் பெருங்காடு அரசு உயா்நிலைப் பள்ளி முதலிடமும், அறந்தாங்கி அரசு மகளீா்மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் டி.தாமரைச்செல்வன், உடன் அறிவியல் இயக்க மாவட்ட இணைச்செயலாளா் எஸ்.நாகூா்கனி உள்ளிட்டோா்.