புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லுக்குடியிருப்பு கிராமத்தில் நெல் சாகுபடித் தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரிமளம் வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கல்லுக்குடியிருப்பின் முன்னோடி விவசாயி சுப்பிரமணியன் நிலத்தில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகா் திருப்பதி, வேளாண் உதவி இயக்குநா் காளிமுத்து ஆகியோா் கலந்து கொண்டு விவசாயிகளுடன் பேசினா்.
மேலுரம் இடுதல் பற்றி உதவி வேளாண் அலுவலா் சுவேதா, உப்புக் கரைசல் மற்றும் அசோஸ்பயிரில்லம் விதை நோ்த்தி செய்தல் குறித்து தொழில்நுட்ப மேலாளா் காா்த்தி ஆகியோா் செய்துக் காட்டினா்.