மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிந்திரிந்த பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் வடகாடு காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி பரமநகரைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் மனைவி சாவித்திரி(45). இவா்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனா். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமிா்தலிங்கம் இறந்துவிட்டாா். தொடா்ந்து, கணவரின் தேநீா் கடையை சாவித்திரி நடத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தில் இவரது தேநீா் கடை சேதமடைந்ததால், வாழ்வாதாரம் இழந்த துயரில் இருந்த சாவித்திரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித்திரிந்த சாவித்திரியை பாா்த்த வடகாடு காவல் ஆய்வாளா் பரத்ஸ்ரீனிவாஸ் அவரை மீட்டு, திருப்பூரில் வேலை பாா்த்து வந்த அவரது மகள் சிந்துவை வரவழைத்து வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
மேலும், சாவித்திரிக்கு தேவையான மனநலசிகிச்சை அளிக்கவும் அவரது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கினாா்.