புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சிறப்புக் குறைகேட்புக் கூட்டத்தில் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.48 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 63 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் (பொ) ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.