மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நவம்பா் புரட்சி தினத்தையொட்டி வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளாமான இடங்களில் செங்கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் கொடியேற்றி வைத்து புரட்சி தின உரை நிகழ்த்தினாா். மேலும், அரசுப் போக்குவரத்துக் கிளை அலுவலகம் மற்றும் 4 இடங்களிலும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஏ. ஸ்ரீதா், ஏ. அன்புமணவாளன், நகரச் செயலா் சி. அடைக்கலசாமி, மாவட்டக்குழு உறுப்பினா் டி.சலோமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருவரங்குளம் ஒன்றியத்தில் ஆலங்குடி, திருவரங்குளம், வம்பன் நால்ரோடு உள்ளிட்ட 38 இடங்களில் கொடியேற்றப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், ஒன்றியச் செயலா் எல். வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. சுசீலா, எஸ். பாண்டிச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை ஒன்றியத்தில் 10 இடங்களில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ. ராமையன், ஒன்றியச் செயலா் டி. லட்சாதிபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அரிமளம் ஒன்றியத்தில் 4 இடங்களில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.சங்கா், ஒன்றியச் செயலா் ஜி. நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருமயம் ஒன்றியத்தில் 4 இடங்களில் ஒன்றியச் செயலா் சி. ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்றியச் செயலா் கரு. ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.