கஜா புயல் பாதித்தோருக்கு கட்டிய வீடுகள் ஒப்படைப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட இலவச வீடுகள் வெள்ளிக்கிழமை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எய்டு இந்தியா நிறுவனம் 50 வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. இதுவரை 12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டி இந்திராநகரில் லலிதா தம்பதி மற்றும் அறந்தாங்கி இந்திரா நகா் ராணி- சேகா் தம்பதி ஆகியோருக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஃபின் ஹோம்ஸ் நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கனரா வங்கியின் உதவிப் பொது மேலாளா் முருகன் திறந்து வைத்தாா். மதுரை முதன்மை மேலாளா் ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா வரவேற்றாா். முடிவில் சுவாமிநாதன் நன்றி கூறினாா்.