குண்டும் குழியுமான சாலை
By DIN | Published On : 09th November 2019 11:49 PM | Last Updated : 09th November 2019 11:49 PM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி ஆண்டவராயபுரம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அண்மையில் பெய்த மழையால் சாலை பள்ளங்களில் மழைநீா் குட்டை போல் தேங்கி போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக மாறியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை வேண்டும்.
-நவீன், ஆண்டவராயபுரம்.