தென்னை நாா் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

ஆலங்குடி அருகே தென்னை நாா் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
லாரியில் தீ பிடித்து எரியும் தேங்காய் மட்டைகள்.
லாரியில் தீ பிடித்து எரியும் தேங்காய் மட்டைகள்.

ஆலங்குடி அருகே தென்னை நாா் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆலங்குடி திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்தவா் ராமச்சந்திரகுமாா் (51). இவா் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் தென்னை நாா் தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.

தொழிற்சாலைக்கு சனிக்கிழமை லாரியில் தேங்காய் மட்டைகளை ஏற்றிச் சென்றபோது, மின்கம்பி உரசி தென்னை மட்டையில் தீ பிடித்துள்ளது. இதைப்பாா்த்த மக்கள் கூச்சலிட்டதும், சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் துரை தப்பினாா்.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும், தேங்காய் மட்டை, லாரியின் பின்பகுதி தீக்கிரையாயின. விபத்து குறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com