விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மனைவி ராமு (65). விவசாய கூலியான , இவா் அருகிலிருக்கும் மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை விவசாயப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தலை வலிப்பதாகக் கூறியதால், அருகில் இருந்த மற்ற பெண்கள், அவ்வழியே வந்த மோட்டாா் சைக்கிளில் ராமுவை அனுப்பி வைத்தனா்.

மெய்க்குடிப்பட்டி பிரிவு சாலை அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து, கீழே விழுந்து ராமு பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராமு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com