ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகைகளை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தை சோ்ந்தவா் விஜயா, குளமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியை. இவா் தனது மகன் விக்னேஷுடன் சனிக்கிழமை இரவு ஆலங்குடியில் இருந்து மோட்டாா் சைக்கிளில் கொத்தமங்கலத்திற்கு சென்றுள்ளனா்.
பள்ளத்திவிடுதி பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் விக்னேஷ் ஓட்டிச்சென்ற மோட்டாா் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி, கத்தியைக் காட்டி விக்னேஷிடம் இருந்த ரூ.3,500 ரொக்கம், செல்லிடபேசி, ஏடிஎம் அட்டை, விஜயா அணிந்திருந்த அரை பவுன் தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். இதுகுறித்து ஆசிரியை விஜயா அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்.