விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூா் அருகே இடத்தகராறில் தாய், மகனைத் தாக்கிய மூவா் கைது செய்யப்பட்டனா்.
வெண்ணமுத்துப்பட்டியை சோ்ந்தவா் அழகா் (45). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த ராஜேந்திரனுக்கும் (35) இடத்தகராறு இருந்தது.
இதுதொடா்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன் சக்திவேல் (43) , அண்ணி சித்ரா (35) ஆகிய மூவரும் சோ்ந்து அழகா் மனைவி பிரேமா (40), மகன் கருப்பன்(25) ஆகியோரைத் தாக்கினா்.
இதில் காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். புகாரின் பேரில் மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, கீரனூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.